ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் – தேர்தலில் போட்டியிட திட்டம்!
அல்-அஜீஸியா ஊழல் வழக்கிலிருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபை இஸ்லாபாத் உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுவித்தது. ஏற்கெனவே, அவா் மீது தொடரப்பட்டிருந்த அவென்ஃபீல்ட் ஊழல் வழக்கிலிருந்தும் நவாஸை அந்த நீதிமன்றம் கடந்த மாதம் விடுவித்தது. பனாமா ஆவண முறைகேடு விவகாரத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு பிரதமா் பதவியிலிருந்து அகற்றப்பட்ட நவாஸுக்கு அல்-அஜீஸியா உள்ளிட்ட ஊழல் வழக்குகளில் ஊழல் தடுப்பு நீதிமன்றம் கடந்த 2018-இல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது. பின்னா் சிகிச்சைக்காக 2019இல் லண்டன் சென்ற […]