ஜெர்மனியில் குடியுரிமை சட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம் – இரத்து செய்யப்படும் திட்டம்
ஜெர்மனியில் வினைத்திறனாக செயற்படும் வெளிநாட்டவர்களுக்கு மூன்று ஆண்டுகள் நாட்டில் வசித்த பின்னர் குடியுரிமை வழங்கும் திட்டத்தை இரத்து செய்ய புதிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் ஜூன் 2024இல் நடைமுறைக்கு வந்தது. இதற்கு விண்ணப்பதாரர்கள் C1 நிலை ஜெர்மன் மொழி திறனையும், வேலை, கல்வி அல்லது சமூகத்தில் குறிப்பிடத்தக்க நல்ல வினைத்திறனையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும். இந்நிலையில், குறித்த சட்டத்தை இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக சன்சிலராக பதவியேற்கவுள்ள ஃப்ரீட்ரிக் மெர்ஸ் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார். […]