அமெரிக்கா, சீனா முடிவால் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட மாற்றம்
அமெரிக்காவும் சீனாவும் அவற்றின் வரித்திட்டங்களை 90 நாள்களுக்கு ஒத்தி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து பங்குச்சந்தைகள் மீட்சி கண்டுள்ளன. வரி ஒத்திவைப்பு மக்களுக்கு நற்செய்தியாக அமைந்திருக்கிறது. அமெரிக்காவில் பொருளியல் மந்தநிலை ஏற்படும் சாத்தியம் தற்போது குறைவாக இருப்பதாக முதலீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லந்தின் ஜெனீவா (Geneva) நகரில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்காவும் சீனாவும் அவற்றின் வரித்திட்டங்களை ஒத்திவைக்க ஒப்புக்கொண்டன. சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் மீதான வரியை 145 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம் வரை […]