காசா நகரில் தஞ்சம் புகுந்த பாலஸ்தீனியர்களை வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவு
காஸாவில் உள்ள குடியிருப்பாளர்களை இதுவரை இல்லாத வகையில் இஸ்ரேல் வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. வெடிகுண்டுகளால் ஏற்கெனவே பாதி தகர்க்கப்பட்ட காஸா நகரைப் பாதுகாப்பற்ற இடமாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. கடுமையான தாக்குதலுக்குமுன் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடும்படி இஸ்ரேலியத் தற்காப்புப் படைகள் குடியிருப்பாளர்களிடம் அறிவுறுத்தின. இஸ்ரேலிய ராணுவம் குறிப்பிட்ட கட்டடங்களில் இஸ்லாமியப் பல்கலைக்கழகம், அல்-ஷிஃபா மருத்துவமனை, மூன்று முன்னாள் பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும். ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்ட அந்தக் கட்டடங்களைத் தளபத்திய, கட்டுப்பாட்டு நிலையங்களாகப் பயன்படுத்துவதாய் இஸ்ரேல் குறைகூறினாலும் உள்ளூர் அதிகாரிகளும் […]