மத்திய கிழக்கு

காசா போர் நிறுத்தத்திற்கு நிபந்தனை விதித்த இஸ்ரேல்!

  • May 19, 2025
  • 0 Comments

காசா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் 3 நிபந்தனைகள் விதித்துள்ளது. அதாவது பிணைய கைதிகளை விடுதலை செய்து ஹமாஸ் அமைப்பு நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் காசாவில் ஆயுதங்கள் இருக்க கூடாது என்று இஸ்ரேல் நிபந்தனைகள் விதித்துள்ளது. மேலும், உலக நாடுகளின் அழுத்தத்தால் உணவு பஞ்சம் அதிகரித்துள்ள காசாவுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் வெளிநாட்டவர்கள்!

  • May 19, 2025
  • 0 Comments

பெருமளவான குடியேறிகளை வரவேற்ற கனடா தற்போது குடியேற்ற கொள்கைகளை சாத்தியமான மாற்றங்களை கொண்டுவருகிறது. இந்த மாற்றங்களின் கீழ் பலர் நாடுகடத்தப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தில் (TFWP) சமீபத்திய மாற்றங்கள் பல்வேறு துறைகளில் கவலைகளை எழுப்பியுள்ள நிலையில் இந்த தகவல் வந்துள்ளது. திறமையான வெளிநாட்டு தொழிலாளர்கள் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொள்வதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன, மேலும் கனேடிய நிறுவனங்கள் இந்த புதிய விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய ஒட்டாவாவை வலியுறுத்துகின்றன. கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் […]

ஆசியா

பாகிஸ்தானில் பரபரப்பான சந்தையில் குண்டுவெடிப்பு : 04 பேர் பலி, 20 பேர் படுகாயம்!

  • May 19, 2025
  • 0 Comments

பாகிஸ்தானின் பதற்றமான தென்மேற்கில் உள்ள ஒரு சந்தை அருகே கார் குண்டு வெடித்ததில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த குண்டுவெடிப்பு, அப்பகுதியில் வன்முறை தீவிரமடைந்து வருவதை காட்டுவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கில்லா அப்துல்லா நகரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்பு பல கடைகள் மற்றும் துணை ராணுவப் படைகள் வசிக்கும் அருகிலுள்ள கட்டிடத்தின் […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தியும் பெயரும் புகழும் கிடைக்கவில்லை – ட்ரம்ப் வேதனை

  • May 19, 2025
  • 0 Comments

இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தியும் அதற்கான பெயரும் புகழும் கிடைக்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பாக்ஸ் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறேன். அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இடையே பொருளாதார உறவை வலுப்படுத்தி உள்ளேன். என்னைப் பொறுத்தவரை வர்த்தகத்தை ஆயுதமாக பயன்படுத்தி அமைதியை நிலைநாட்டி வருகிறேன். அண்மையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மிகப்பெரிய போர் வெடித்தது. […]

உலகம்

பிரான்ஸ், டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகள் விசா இல்லாமல் சீனாவுக்குப் பயணிக்க வாய்ப்பு

  • May 19, 2025
  • 0 Comments

பிரேசில், ஜப்பான், பிரான்ஸ், டென்மார்க், ஆஸ்திரேலியா, லக்சம்பர்க், எஸ்டோனியா மற்றும் பல நாடுகள் ஒரு மாத காலத்திற்கு விசா இல்லாமல் சீனாவுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளன. 2025 ஆம் ஆண்டில் சீனா தனது விசா இல்லாத பயணக் கொள்கையை அதிகாரப்பூர்வமாக விரிவுபடுத்தி, அந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த விரிவான புதுப்பித்தல், சர்வதேச சுற்றுலாவை புத்துயிர் பெறச் செய்வதற்கும், வணிகப் பரிமாற்றங்களை அதிகரிப்பதற்கும், உலகளாவிய கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஒரு முயற்சியாகும். ஜூன் 1, 2025 முதல் மே […]

வட அமெரிக்கா

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறுத்து கவலை வெளியிட்ட வெள்ளை மாளிகை

  • May 19, 2025
  • 0 Comments

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உடல்நிலை குறித்து சோகமான செய்தி வெளியாகியுள்ளது. அவர் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் போட்டியாளரான பைடன் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரம், ஜனாதிபதி ஜோ பைடனுக்கு சிறுநீர் நோய் அறிகுறிகள் அதிகரித்ததை அடுத்து, அவரது புரோஸ்டேட் சுரப்பியில் ஒரு புதிய கட்டி இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது, அதைத் தொடர்ந்து அவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது […]

வாழ்வியல்

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறீர்களா? வெளியான அதிர்ச்சி தகவல்

  • May 19, 2025
  • 0 Comments

அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜியின் ஜர்னல் சார்பாக 90,000 பேரிடம் ஆய்வொன்று செய்யப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் ஈடுபட்ட அனைவருக்கும் accelerometer (ஒரு கட்டமைப்பின் அதிர்வு அல்லது இயக்கத்தின் முடுக்கத்தை அளவிடும் ஒரு சாதனம்) என்ற கருவி தரப்பட்டுள்ளது. அதன்மூலம் அவர்கள் அனைவரும் ‘நடக்கும் நேரம் எவ்வளவு’ மற்றும் ‘ஒரே இடத்தில் உட்கார்ந்த நேரம் எவ்வளவு’ என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த தரவுகளைக் கொண்டு, அவர்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு, இதயம் செயலிழப்பு ஆகியவை வருவது குறித்து சோதனை செய்யப்பட்டது. அதில், […]

இலங்கை

இலங்கை சென்ற வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

  • May 19, 2025
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த தாய்லாந்து நாட்டவர் ஒருவர் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 21 வயதான சந்தேக நபர் பேங்காக்கிலிருந்து கோலாலம்பூர் வழியாக மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH0179 இல் வந்தார், மேலும் சுங்க அதிகாரிகள் அவரது சாமான்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7.91 கிலோகிராம் ‘குஷ்’ போதைப்பொருளைக் கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு சுமார் 79 மில்லியன் ரூபாய் என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக சுங்க […]

அறிவியல் & தொழில்நுட்பம்

14 நாட்கள் தாக்குப் பிடிக்கும் பேட்டரியுடன் Amazfit Bip 6 Smartwatch

  • May 19, 2025
  • 0 Comments

இன்-பில்ட் ஜி.பி.எஸ். கனெக்டிவிட்டி, 1.97-இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 5 ATM ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட், 340 mAh பேட்டரி, பயோ டிராக்கர் மூலம் ஹெல்த் பீச்சர்கள் என அசத்தலான அம்சங்களுடன் அமேஸ்ஃபிட் பிப் 6 (Amazfit Bip 6) ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தைகளில் வெள்ளிக்கிழமை (மே16) அறிமுகமாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் குறித்த விவரங்களை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்த பெரும்பாலான கேட்ஜெட்ஸ் பிரியர்களுக்கு ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் மீது ஆர்வம் உள்ளது. […]

பொழுதுபோக்கு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : மண்ணில் விதைக்கப்பட்ட உறவுகளுக்கு விஜய் வீரவணக்கம்

  • May 19, 2025
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் அவரது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். குறித்த பதிவில், “உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று, முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம்.” என குறிப்பிட்டுள்ளார். மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும் என குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

Skip to content