இலங்கை

இலங்கை வந்தவுடன் முக்கிய தீர்மானம் எடுக்கவுள்ள பசில் ராஜபக்ஷ!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என அந்த கட்சி தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதியளவில் பஷில் ராஜபக்ஷ நாடு திரும்புவதாகவும் குறிப்பிட்டது.

உத்தேச ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதா? இல்லையா? என்ற தீர்மானமும் இதன் போடு எடுக்கப்படவுள்ளத.

மேலும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கலந்துகொண்டிருந்த அந்த கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பேசுவதாயின் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகியோருடன் முதலில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்தினார்.

இதன் பின்னரே அடுத்த கட்ட பேச்சுவார்த்தை பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் முன்னெடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்காவில் உள்ள பஷில் ராஜபக்ஷ எதிர்வரும் 18ஆம் திகதி நாடு திரும்புகிறார். இவரது வருகையின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர் மட்டத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடுவார்.

இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொது வேட்பாளர் விடயம் குறித்து பேசப்படவுள்ளது. மறுபுறம் ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய அரசியல் கூட்டணிக்காக ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content