இலங்கை செய்தி

இலங்கையில் இளநீர் குடிக்கும் பராக் ஒபாமா: சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படங்கள்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தற்போது இலங்கையில் தங்கியிருப்பதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என தெரியவந்துள்ளது.

இலங்கையின் சுற்றுலாத் துறையானது கடந்த சில மாதங்களாக பல பிரபலங்கள் இலங்கைக்கு வருகை தருவதன் மூலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தற்போது இலங்கையில் விடுமுறையில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும், இலங்கை சாலையில் உள்ள சிறிய கடை ஒன்றில் இளநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், பராக் ஒபாமா இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என பல நம்பகமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அதே சமயம், தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்படும் படங்கள் இந்தோனேஷிய படைப்பாளி அகான் ஹராஹாப் என்பவரால் தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content