நவீன உலகத்தில் ஸ்மார்ட்போன்வாசிகளுக்கு மிகவும் பிடித்த நிறுவனம், பலரும் தாங்கள் இந்த நிறுவன போனை வாங்க வேண்டும் என எண்ணிக்கொண்டு இருக்கும் பிரபல நிறுவனம் ஆப்பிள்.
இந்த நிறுவனம் புதிய மாடல் போனை வெளியிடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
எதிர்பார்த்து காத்திருந்தது போலவே, ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த புதிய மாடல் நேற்று இரவு இந்திய நேரப்படி 10.30 மணி அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் புதியதாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல் வெளியாக இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு கூடுதலாக ஆப்பிள் வாட்ச் சீரிஸையும் அறிமுகப்படுத்தி இன்ப அதிர்ச்சியை கொடுத்தது ஆப்பிள் நிறுவனம்.
நேற்றைய நிகழ்ச்சியில் ஆப்பிள் வாட்ச் எஸ் 9 சீரிஸை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 18 மணி நேரம் பேட்டரி சார்ஜ் நிற்கும் திறன் கொண்ட இந்த ஐபோன் எஸ்9 சீரிஸ் புதிய வசதிகளை கொண்டுள்ளது.
இதில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் உடல்நிலையை கண்காணிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.