உலகம் செய்தி

அமெரிக்காவில் 38 ஆண்டுகள் தவறாக சிறையில் இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் மரணம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடிமகன் கிரிஸ் மஹராஜ், தான் செய்யாத குற்றத்திற்காக 38 ஆண்டுகள் சிறையில் இருந்து வந்த நிலையில் இன்று அமெரிக்க சிறை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

டெரிக் மற்றும் டுவான் மூ யங் கொலைகளுக்காக 1986 ஆம் ஆண்டு மஹராஜ் தவறாக தண்டிக்கப்பட்டார். அவரது மரண தண்டனை 2002 இல் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

அவர் 2019 இல் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டார், ஆனால் அவர் குற்றமற்றவர் என்பதற்கான சான்றுகள் அவரை விடுவிக்க போதுமானதாக இல்லை என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பின் காரணமாக சிறையில் இருந்தார்.

அவரது மனைவி மரிதா மகராஜ், அவரது மரணம் குறித்து ஆழ்ந்த சோகத்தை வெளிப்படுத்தினார்.

மஹாராஜின் வழக்கறிஞரான கிளைவ் ஸ்டாஃபோர்ட் ஸ்மித், அவரது மரணத்தை உறுதிசெய்து, அவரது பெயரை நீக்குவதற்கான போராட்டத்தைத் தொடரப்போவதாக உறுதியளித்தார்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content