இலங்கை

இலங்கைக்கு இதுவரையான காலப்பகுதியில் வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கைக்கு இதுவரையான காலப்பகுதியில் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 608489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் ஜூன் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 84இ003 எனவும் அவர்களில் பெரும்பாலோர் இந்தியப் பிரஜைகள் எனவும் அதிகாரசபை மேலும் கூறியுள்ளது.

இதேவேளை ரஷ்யா,  இங்கிலாந்து,  அவுஸ்திரேலியா,  ஜேர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் மேற்கூறிய காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

(Visited 9 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content