Site icon Tamil News

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய நடவடிக்கை!

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் ஐந்தாவது பெரிய பங்குதாரரான தேசிய சேமிப்பு வங்கி, அதன் பங்குகளை இன்று (09.11) விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய சேமிப்பு வங்கியானது ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் 13.15 மில்லியன் பங்குகளை வைத்திருந்ததுடன் இன்று ஒரு பங்கின் பெறுமதி ரூ. 96.00க்கு விற்கப்பட்டது.

அதன்படி, இந்த பரிவர்த்தனையின் மொத்த மதிப்பு  1.26 பில்லியன் ரூபாயாகும்.  வாங்குபவர் தரப்பு இதுவரை வெளியிடப்படவில்லை,

ஸ்ரீலங்கா டெலிகொம் கம்பனியின் முதலாம் பங்குதாரரான திறைசேரி இந்தப் பங்குகளை கொள்வனவு செய்திருந்தால், திறைசேரியின் வசமிருந்த டெலிகொம் பங்கு உரிமையானது 50% என்ற வரம்பைத் தாண்டியிருக்கும்.

Exit mobile version