Site icon Tamil News

பிரேசிலின் இளம் பாடகர் ஒருவர் ஆக்டோபஸ் கடித்து உயிரிழந்தார்

ஆக்டோபஸ்  கடித்து பிரேசில் பாடகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இளம் பாடகர் டார்லின் மொரைஸ் (28) இவ்வாறு உயிரிழந்தார்.

ஒரு ஆக்டோபஸ் முகத்தில் கடித்த பிறகு, மொ ரைஸ் மிகவும் பலவீனமாக உணர்ந்தார் மற்றும் கடித்த பகுதி கருநீலமாக மாறியது. இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மொரைஸின் மனைவி ஜூலினி லிஸ்போவா, ஆக்டோபஸ் கடித்ததால் ஒவ்வாமை ஏற்பட்டதாக நினைத்து உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறினார்.

அனைத்து அடிப்படை சிகிச்சைகளும் பெற்று அன்றைய தினமே மொரைஸ் வீடு திரும்பினார்.

ஆனால், ஞாயிற்றுக்கிழமையும் அவரது முகத்தில் இருந்த தழும்பும், பலவீனமும் மாறாததால், வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

ஆனால் திங்கள்கிழமை மரணம் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிக்கைகளின்படி, மொரைஸின் 15 வயது வளர்ப்பு மகளையும் அதே ஆக்டோபஸ் கடித்தது.

அவரது உடல்நிலை பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த வகை ஆக்டோபஸ் என்ற தெளிவான தகவல் இன்னும் கிடைக்கவில்லை.

பதினைந்து வயதில் தனது இசை வாழ்க்கையைத் தொடங்கிய மொரைஸ், தனது நண்பர் மற்றும் சகோதரருடன் இசைக்குழுவில் உறுப்பினராகவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version