செய்தி தமிழ்நாடு

மழை நீரில் அடித்து வரப்பட்ட வெள்ளை நாகம்

கோவையில் நேற்று முன் தினம் பெய்த கோடை மழையால் போத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில் குறிச்சி பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே புகுந்த மழை நீரில் வெள்ளை நாகம் ஒன்று அடித்து வரப்பட்டது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பாம்பு பிடி தன்னார்வ அமைப்பிற்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த அவர்கள் மழை நீரில் இருந்த 3.5 அடி நீளமுள்ள வெள்ளை நாகத்தை பத்திரமாக மீட்டனர்.

பிறகு கோவை சரக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, வெள்ளை நாகம் மாங்கரை வனப்பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது.

இதே போல கடந்த 2022 ல் குறிச்சி பகுதிக்கு 3.5 அடி நீளமுள்ள வெள்ளை நாகம் வந்து மீட்கப்பட்டது குறிப்பிடதக்கது.

அருகே உள்ள குளத்தில் இருந்து வெள்ளை நாகம் மழை நீரில் அடித்து வரப்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

(Visited 8 times, 1 visits today)
Avatar

NR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content