ஐரோப்பா

ஐரோப்பாவில் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றிய தடுப்பூசி

ஐரோப்பாவில் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்புமருந்து குறைந்தது 1.4 மில்லியன் உயிர்களைக் காப்பாற்றியிருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறுகிறது.

குளிர்காலத்தில் ஏற்படும் உடல்நலக் குறைவால் ஐரோப்பிய மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் COVID-19, Influenza தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது மிக முக்கியம் என்று நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பாவில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட நோய்ப்பரவலால் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

சில ஐரோப்பிய நாடுகளில் COVID-19 பரவல் மீண்டும் தலைதூக்குகிறது. ஒரே நேரத்தில் மற்ற சுவாச நோய்களும் பரவுகின்றன என்று அண்மைத் தரவுகள் காட்டுகின்றன.

எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளை நேரத்தோடு போட்டுக்கொள்வதன் முக்கியத்துவத்தைச் சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய வட்டார இயக்குநர் டாக்டர் ஹான்ஸ் குலூஜ் டுத்துக்கூறினார்.

 

(Visited 14 times, 1 visits today)
See also  பத்திரிகைக்காக குற்றத்தை ஒப்புக்கொண்டதால் சுதந்திரமாக இருக்கிறேன் - ஜூலியன் அசாஞ்ச்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content