Site icon Tamil News

ஜெர்மனியில் தனிமையில் இருந்த வயோதிப பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஜெர்மனியின் மூதாட்டி ஒருவர் அவரது இல்லத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

எஸன் நகரத்தில் முதலாம் திகதி 86 வயதுடைய மூதாட்டி ஒருவர் வீட்டில் தனிமையில் இருந்த பொழுது கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த 86 வயதுடைய மூதாட்டியானவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

குறித்த மூதாட்டியின் உறவினர்கள் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர்.

இதன் பொழுது இவருடன் தெடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியதால் அச்சம் கொண்ட உறவினர்கள் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று பார்த்த போது இரத்த வெள்ளத்தில் இறந்து காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.

குறித்த உறவினர் பொலிஸாரை நாடிய நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் ஃவொர் அவுஸில் அமைந்து இருக்கின்ற எடல்கமராஸ் என்ற வீதியில் கொலை இடம்பெற்றதாக தெரியவந்திருக்கின்றது.

மேலும் பொலிஸார் பொது மக்களிடம் இந்த கொலையை செய்த சூத்திரதாதியை கைது செய்வதற்குரிய தகவல்களை தந்து உதவுமாறு வேண்டுதல் விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Exit mobile version