இலங்கை செய்தி

இலங்கையில் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்

இலங்கையில் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது இன்று மாலை பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதுருகிரிய, கல்வருசாவ வீதியில் அமைந்துள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீடொன்றின் மீது இவ்வாறு பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், குறித்த வர்த்தகரின் வீட்டிற்கு முன்னால் மலர்வளையம் வைத்தமை தொடர்பில் பல சந்தேக நபர்கள் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
வெளிநாட்டிலுள்ள பாதாள உலக செயற்பாட்டாளர் ஒருவர் குறித்த வர்த்தகரிடம் பல தடவைகள் கப்பம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பணத்தை செலுத்தாத காரணத்தினால் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தி அவரை அச்சுறுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக நவகமுவ பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content