Site icon Tamil News

இலங்கையில் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்

இலங்கையில் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது இன்று மாலை பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதுருகிரிய, கல்வருசாவ வீதியில் அமைந்துள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீடொன்றின் மீது இவ்வாறு பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், குறித்த வர்த்தகரின் வீட்டிற்கு முன்னால் மலர்வளையம் வைத்தமை தொடர்பில் பல சந்தேக நபர்கள் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
வெளிநாட்டிலுள்ள பாதாள உலக செயற்பாட்டாளர் ஒருவர் குறித்த வர்த்தகரிடம் பல தடவைகள் கப்பம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பணத்தை செலுத்தாத காரணத்தினால் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தி அவரை அச்சுறுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக நவகமுவ பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version