இந்தியா

நடுவீதியில் திடீரென தீ பிடித்த அரசு பேருந்து.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அட்டிங்கல்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்து செம்பகமங்கலம் அருகே வந்தபோது இன்ஜின் பகுதியில் புகை வெளிவந்தது. இதை கவனித்த ஓட்டுநர் உடனே பேருந்தை நிறுத்தி பயணிகளை வெளியேற்றினார்.

சில நிமிடங்களில் பேருந்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.இந்நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பயணிகள் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 9 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content