ஆசியா

சிங்கப்பூரில் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆபத்தான பழக்கம்

சிங்கப்பூரில் மின்சிகரெட் பயன்படுத்திய 800 மாணவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் தொடர்பில் சுகாதார அறிவியல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டிருப்பதாக இரண்டாம் கல்வி அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் கூறியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் அவர் அது பற்றிய கேள்விக்குப் பதில் தந்தார். கடந்த ஐந்தாண்டில் மாணவர்களிடையே மின்சிகரெட் பழக்கத்தின் நிலை என்ன என்று கேட்கப்பட்டது.

2020ஆம் ஆண்டுக்குமுன் சுமார் 50 மாணவர்களே சுகாதார அறிவியல் ஆணையத்தின் பார்வைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர் என்று மாலிக்கி குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் மாணவர்களிடையிலும் பொதுவாகச் சமூகத்திலும் மின்சிகரெட் பரவுவது குறித்துக் கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் கவலை அடைந்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகள் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். அத்தகைய குற்றத்திற்கு 2,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 9 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content