Tamil News

மன உளைச்சலின் மிகுதியால் 16 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு!

தமிழகத்தின் வேலூர் குடியாத்தம் அருகே தந்தையால் 16 வயது சிறுமி ஒருவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொணட சோக சம்பவம் நடந்துள்ளது.

சின்னராஜா குப்பம் பகுதியை சேர்ந்த சிறுமி விஷ்ணு பிரியா, இவரது தந்தை கூலித்தொழிலாளி.குடிக்கு அடிமையான விஷ்ண பிரியாவின் தந்தை அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் சண்டையிட்டுள்ளார்.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விஷ்ண பிரியா, குடிக்க வேண்டாம் என தந்தையிடம் பலமுறை கேட்டுக்கொண்டார்.

போயிட்டு வரேன்- தந்தையால் தற்கொலை செய்து கொண்ட 16 வயது சிறுமி- உருக்கமான கடிதம் | Daughter Suicide Letter Shocked

எனினும் தந்தையால் குடிப்பழக்கத்திலிருந்து மீள முடியவில்லை, ஒரு கட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் விஷ்ணு பிரியா தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்துள்ளார்.தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.

அதில், தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும் , எனது குடும்பம் எப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றதோ அப்போதுதான் எனது ஆத்மா சாந்தி அடையும் என எழுதிவைத்துள்ளார்.

Exit mobile version