தைவான் நிலநடுக்கத்தில் 900 பேர் காயம் – இடிபாடுகளுக்குள் 127 பேர்
தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆக உயர்ந்துள்ளது.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900ஐ தாண்டியுள்ளது.
இடிபாடுகளில் மொத்தம் 127 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கத்தால் சுரங்கப்பாதைகள் இடிந்து விழுந்து பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
சுரங்கப்பாதையில் சிக்கிய 77 பேரின் உயிரை நிவாரணக் குழுவினர் காப்பாற்றியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.
அதன் பலத்துடன், தைவான், ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.