உலகம் செய்தி

சோமாலியாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பேர் உயிரிழப்பு

மத்திய சோமாலியாவில் உள்ள சந்தையில் வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹிரான் பகுதியில் உள்ள புலோபேர்டில் மிகவும் பரபரப்பான சந்தைக்கு அருகே காரில் வைக்கப்பட்டிருந்த வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.

சோமாலியாவில் அல்-கொய்தாவுடன் இணைந்த அல்-ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பினால் சோமாலியா தொடர்ந்து தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதாகவும், அவர்கள் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதன்படி, இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் மூன்று இராணுவத்தினர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்கும் அதிகாரிகள், இராணுவத் தளபதி ஒருவரின் வீடும் சந்தைக்கு அருகாமையில் அமைந்துள்ளதாகவும், தமது இலக்கு அருகிலுள்ள அரசாங்க முகாமையே தமது இலக்கு என நம்புவதாகவும் தெரிவிக்கின்றனர்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content