ஸ்கொட்லாந்தில் 14000 வீடுகளுக்கு மின் துண்டிப்பு!
ஸ்காட்லாந்தில் உள்ள பல வீடுகளுக்கு மின்துண்டிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக முன்னுரைக்கப்பட்டுள்ளது. முன்னதாக கெரிட் புயல் காரணமாக ஏறக்குறைய 14 ஆயிரம் வீடுகளுக்கு மின் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், Scottish and Southern Electricity Networks வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளைய (29.12) தினம் மேலும் சில வீடுகளுக்கு மின் துண்டிப்பு இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
ஸ்காட்லாந்தில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மின்சாரம் திரும்ப எவ்வளவு காலம் ஆகும் என்று பிபிசி ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அனேகமாக வெள்ளிக்கிழமை இரவுக்குள் தவறுகளை இனங்கண்டு சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.
(Visited 9 times, 1 visits today)