ஐரோப்பா

லண்டனில் பயங்கரம்! வாளைக் கொண்டு பொதுமக்களை தாக்கிய நபர்: 13 வயது சிறுவன் பலி

கிழக்கு லண்டனில் உள்ள ஹைனால்ட் பகுதியில் இன்று கையில் வாள் ஒன்றுடன் சுற்றித்திரிந்த நபர், அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

அந்த நபரை போலீசார் உடனடியாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

தாக்குதலில் காயமடைந்த 13 வயது சிறுவன் மருத்துவமனைக்குச் சென்றபோது உயிரிழந்ததாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்தனர்: மூன்று பொதுமக்கள் மற்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் அடங்குவர்.

இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல என்றும், இதனால் பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

(Visited 11 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content