இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு!
![](https://iftamil.com/wp-content/uploads/2023/04/13-4-1280x700.jpg)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
இம்மாத தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 200 என்ற அளவில் இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து நேற்று 1,573 ஆக இருந்தது.
இந்நிலையில் இன்று பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 9 ஆயிரத்து 676 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,222 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 66 ஆயிரத்து 925 ஆக அதிகரித்துள்ளது.
தினசரி பாதிப்பு நாள் தோறும் அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.