Site icon Tamil News

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

இம்மாத தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 200 என்ற அளவில் இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து நேற்று 1,573 ஆக இருந்தது.

இந்நிலையில் இன்று பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 9 ஆயிரத்து 676 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,222 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 66 ஆயிரத்து 925 ஆக அதிகரித்துள்ளது.

தினசரி பாதிப்பு நாள் தோறும் அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version