Site icon Tamil News

யாழில் இனங்காணப்பட்ட மோட்டார் குண்டு!

யாழ் வடமராட்சி வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி ஒன்றில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் மோட்டார் குண்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் குண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த பகுதியில் இனங்காணப்பட்டதுடன், இது குறித்து வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று அந்த குண்டினை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version