Site icon Tamil News

முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி பங்கேற்பு

பம்மல், அனகாபுத்தூர்  பகுதிக கழக அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா, முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி பங்கேற்பு.

சென்னை அடுத்த பம்மல் பேரூந்து நிலையம் அருகே பம்மல் வடக்கு பகுதிகழக அதிமுக சார்பில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா பகுதிகழக செயலாளர் ஜெகன்நாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி.

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லப்பாக்கம் ச.இராசேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து  ஏழை, எளிய மக்களுக்கு நீர்மோர், இளநீர், பழங்கள், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

இதில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் துரைதண்டபானி, முகுந்தன் மற்றும் வழக்கறிஞர் இரா.லோகநாதன் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து அனகாபுத்தூர் பேரூந்து நிலையம் அருகே முன்னாள் நகரமன்ற தலைவர் அனகை பி.வேலாயுதம் தலைமையில்.

தண்ணீர் பந்தல் திறப்பு விழா முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி திறந்து வைத்து  பொதுமக்களுக்கு நீர்மோர், பழங்கள், இளநீர், குளிர்பானங்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version