Site icon Tamil News

மனைவி வெளிநாட்டில் – இலங்கையில் கணவன் எடுத்த விபரீத முடிவு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ப்ரௌன்ஸ்வீக் தோட்ட புளூம்பீல்ட் பிரிவில் இரண்டு பிள்கைளின் தந்தை தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

53 வயதான நபரே தன்னுயிரை மாய்த்துக்கொண்டார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

மனைவி வெளிநாட்டில் பணிபுரிகின்றார். பிள்ளைகள் இருவரும் தலைநகரில் பணியாற்றுக்கின்றனர். இந்நிலையிலேயே நேற்று காலை, இவ்வாறு முடிவெடுத்துள்ளார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சென்று பரிசோதனை மேற்கொண்டு வருவதுடன் உடலை பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Exit mobile version