Site icon Tamil News

பிரான்ஸில் 13 வயதுடைய சிறுமிக்கு 50 வயதுடைய நபர் செய்த அதிர்ச்சி செயல்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 13 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு மேற்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இரு வாரங்களுக்கு முன்னர் பரிசில் இடம்பெற்றுள்ளது.

எனினும் இது தொடர்பான தகவல்களை நேற்று முன்தினமே பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 17 ஆம் திகதி அன்று பாரிசில் 10 ஆம் வட்டாரத்தில் வைத்து 13 வயதுடைய சிறுமி ஒருவரை 50 வயதுடைய ஒருவர் பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளார்.

பொலிஸார் மேற்கொண்டு வந்த விசாரணைகளில் குறித்த நபர் மார்ச் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபர் இதுபோன்ற பல்வேறு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டு, பொலிஸாரால் நன்கு அறியப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version