Site icon Tamil News

தொழிநுட்பத்தின் அதிநவீன முன்னேற்றங்களை மேம்படுத்துவதன் மூலம் எதிர்காலத்திற்கு தயாராகுமாறும் ஜனாதிபதி தெரிவிப்

IMF உதவியுடன் நான்கு வருடங்களில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர் பழைய முறையை பின்பற்றுவதா அல்லது  புதிய முறையின் ஊடாக வளர்ந்து வரும் உலகத்துடன் முன்னோக்கிச்  செல்வதா என்பதை தீர்மானிக்க வேண்டும் என கொழும்பு ஆனந்த கல்லூரியில் இன்று இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

2048 ஆம் ஆண்டாகும் போது  நாட்டைப் பொறுப்பேற்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களையும்   நம் நாட்டு மாணவர்கள் பெற வேண்டும் எனவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்தார்.

தொழிநுட்பத்தின் அதிநவீன முன்னேற்றங்களை மேம்படுத்துவதன் மூலம் எதிர்காலத்திற்கு தயாராகுமாறும்  ஜனாதிபதி கூறினார்

சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும். இன்று, மாலைதீவு சுற்றுலாத்துறையில் முன்னணியில் உள்ளது. நாடு முழுவதும் கடற்கரைகள் உள்ளன.

மலைநாடு, எங்களுக்கெனத் தனித்துவமான கலாச்சாரம் உள்ளது. பௌத்த மற்றும் இந்து மத ஸ்தலங்கள் உள்ளன. அவற்றை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

அண்டை நாடான இந்தியாவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். அதில் குறைந்தபட்சம் ஒரு மில்லியன் பேரை கொண்டுவந்தாலும் போதும். வேறு எதுவும் தேவையில்லை.

இந்தியா இன்று வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியா முன்னேருவதற்கு சில மூலப் பொருட்கள் இல்லை. உற்பத்தி செய்யப்படும்  பொருட்களை  வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டும்.

அவர்களின்  துறைமுகத்தில் போதிய இடவசதி இல்லை. எனவே கொழும்பை பாரிய துறைமுகமாக மாற்ற வேண்டும். புதிய தெற்கு துறைமுகத்தைப் போன்றே வடக்கு துறைமுகமும் உருவாக்கப்பட்டது.

கடல்சார் பொருளாதாரத்தை நாம் உருவாக்க முடியும். இதுவரை எந்த ஒரு நாடும் இதனை செய்யவில்லை. எங்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். நம்மிடம் தகவல் தொழில்நுட்பம்  இருக்கிறது.இதில்  முக்கிய  அங்கம் செயற்கை நுண்ணறிவை பெறுவது.

குறிப்பாக நம்மிடம் உள்ள  பிரிவு அது. எதிர்காலத்தில், நாங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு செல்ல வேண்டும். மற்ற நாடுகளை விட முன்னேறும் நாடாக மாற்ற வேண்டும்.

அத்தகைய நாட்டைக் கட்டியெழுப்ப புதிய தலைவர்கள் தேவை. எங்களால் வழிகாட்ட  மட்டுமே  முடியும். யார் தலைமை ஏற்க வேண்டும்? இளைஞர்களாகிய நீங்கள் தான் தலைமைத்துவத்தை பெற  வேண்டும். 77 ஆம் ஆண்டில்  ஜே.ஆர் கூட அது உங்கள் எதிர்காலம் என்று தான்  கூறினார்.

அதனால் நல்லது கெட்டது இரண்டும் வளர்க்கப்பட்டது. இப்போது எனக்கும்  உங்கள் எதிர்காலம் என்று தான்  சொல்ல வேண்டும். அந்த சவாலை ஏற்க முடியுமா? நமது எண்ணங்களின்படி சமுதாயத்தை  மாற்றுவது பயனற்றது. இளைஞர்கள் புதிய தொழில்நுட்பத்துடன் உள்ளனர்.

அந்த  சமூகத்திற்கு செல்லுங்கள். எல்லாவற்றினதும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.  இந்தப் பாடசாலையிலுள்ள திறமையானவரகள் முன்னேறிச் செல்வார்கள்.

சவால்களை இருந்தால் அதனை ஏற்க பயப்பட வேண்டாம். சவால்களை ஏற்றுக்கொண்டால் தோற்றுவிடுவோம் என்று நினைத்தால் ஒன்றும் செய்ய முடியாது. சவால்களை யோசிக்காமல் ஏற்றுக்கொண்டால் முன்னேறிச் செல்ல முடியும்.

Exit mobile version