செய்தி தமிழ்நாடு

டன் கணக்கில் ஐஸ்கிரீம் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்

தமிழகத்தில்
அதிகரித்து வரும் கோடை வெயில் தாக்கத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் குடிநீர் தாகத்தை போக்க தண்ணீர் பந்தல்களை திறந்து வைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்களை அதிமுகவினர் திறந்து வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில், அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை அணி சார்பில் மாவட்ட செயலாளர் வி.ஆர். மணிவண்ணன் ஏற்பாட்டின் பேரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் டன் கணக்கில் வெள்ளரி, தர்பூசணி, இளநீர்,நுங்கு, சாத்துக்குடி, ஆரஞ்சு, மாம்பழம், அண்ணாச்சி, உள்ளிட்ட பழ வகைகளும்மோர், கரும்புச்சாறு, ஐஸ்கிரீம், உள்ளிட்டவைகளை வகை வகையாக வைத்து மிகப்பெரிய பழ மண்டி போல தண்ணீர் பந்தல் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா கணேசன், ஆகியோர் கலந்து கொண்டு பிரம்மாண்ட தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழ வகைகளையும் பழரசங்களையும் வழங்கி பொதுமக்களின் கோடை வெயிலின் தாகத்தை தணித்தார்கள்.

தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் அதிமுகவின் முன்னணி நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்களும் என திரளானோர் கலந்து கொண்டனர்.

தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே டன் கணக்கில் வைக்கப்பட்டிருந்த பழ வகைகளை போட்டி போட்டுக் கொண்டு பொதுமக்கள் ஒன்றைக் கூட விடாமல் அள்ளிச் சென்றதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடன் கழக அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ். சோமசுந்தரம், பகுதி கழக செயலாளர்கள் என்.பி.ஸ்டாலின், பாலாஜி, ஒன்றிய கழக செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

NR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content