Site icon Tamil News

ஒருவரை கல்லால் அடித்து கொலை

திருப்போரூர் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை கல்லால் அடித்து கொலை செய்த  நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டு பகுதியில் வசித்து வருபவர் தேவராஜ் வயது 55 இவரது பேத்தியின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நேற்று நடைபெற்றது.  இதில் தனது மகனின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த சதீஷ்  என்பவருடன் சேர்ந்து இரவு மது அருந்தியதாக கூறப்படுகிறது.

மது போதையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானதாக கூறப்படுகிறது.  இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ் அருகில் இருந்த கருங்கல்லை எடுத்து  தேவராஜை தலையில் அடித்துள்ளார் இதனால் மயக்கம் அடைந்த தேவராஜை உறவினர்கள் கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக.

அனுமதித்துள்ளனர், அங்கு தேவராஜை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர் மது போதை தகராறில் உயிர் இழப்பு ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து சதீஷ் என்பவரை திருப்போரூர் காவல் துறையினர் கைது செய்து தேவராஜ் தாக்கப்பட்டது முன்பகையா? அல்லது மது போதையில் எதிர்பாராமல்  நடைபெற்ற சம்பவமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வரும் நிலையில்  காஞ்சிபுரத்திலிருந்து மோப்ப நாய் டைகர் வரவழைக்கப்பட்டு.

மற்றும் கைரேகை நிபுணரின் உதவியுடன் தடயங்களை திரட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க கோரி இறந்த தேவராஜின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் ஓஎம்ஆர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Exit mobile version