கூரிய ஆயுதத்தால் காது மடலை வெட்டியதில் பலத்த காயமடைந்த இளைஞன் இன்று (09) மத்திகஹதென்ன மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மடோல்சிம குருவிகொல்ல கிராமத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஊனமுற்ற இளைஞரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கையடக்கத் தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்துக்கொண்டிருந்த இளைஞன் வீதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மற்றுமொரு நபர் தாக்கியதுடன், காது மடலை கத்தியால் அறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் காயமடைந்தவரின் தாயார் மடோல்சிம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன், மடோல்சிம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.