Site icon Tamil News

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை

இலங்கையில் டொலர் கையிருப்பு அதிகரித்துள்ள நிலையில், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திடம் இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர்  பிரசாத் குலதுங்க  தெரிவித்தார்.

மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சிடம் வாகன இறக்குமதி குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை வாகன இறக்குமதிக்கு அனுமதி கிடைக்கவில்லை  என அவர் மேலும் குறிப்பிட்டார்.

வாகன இறக்குமதிக்கான தடை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் தளர்த்தப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் எதிர்பார்த்துள்ளனர். கடந்த மூன்று வருடங்களாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாமையால் பாவனையாளர்களும் வாகன இறக்குமதியாளர்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இலங்கை வாகன  இறக்குமதியாளர் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டார்.

 

Exit mobile version