Site icon Tamil News

இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க இராஜதந்திரிகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு கோரிக்கை!

நாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க இராஜதந்திரிகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால், குடிவரவு குடியல்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்பிரவரி மாதம் 14 ஆம் திகதி சீ 17 க்லோப்மாஸ்ட்டர் என்ற இரு விமானங்களில் அமெரிக்க இராஜதந்திரிகள் நாட்டிற்கு வருகை தந்திருந்தனர்.

இதற்கமைய குறித்த இராஜதந்திரிகளின் வருகை தொடர்பில் 08 காரணங்களை முன்வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்த கடிதத்தினை அனுப்பிவைத்துள்ளார்.

இதற்கமைய, விமானங்களில் இந்நாட்டிற்கு வருகை தந்தவர்கள் யார்? வருகை தந்தவர்கள் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டார்களா? உள்ளிட்ட 08 கேள்விகளை அவர் இதன்போது முன்வைத்துள்ளார்.

Exit mobile version