Site icon Tamil News

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்படுகிறது

புத்தாண்டு பண்டிகை காலத்தில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த எரிபொருள் கோட்டாவை இன்று (04) நள்ளிரவு முதல் அதிகரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கமைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னதாக திட்டமிட்டபடி, பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் எரிபொருள் தேவைக்கு ஏற்ப, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தேவையான கைருப்புகளை முன்கூட்டியே பெற்றுக் கொண்டுள்ளது.

அதன்படி ஒரு வாரத்திற்கு கீழ்கண்டவாறு  பரிந்துரைக்கப்பட்ட  கோட்டா விநியோகிக்கப்படவுள்ளது.

வாகனத்தின் வகை தற்போதைய கோட்டா பரிந்துரைக்கப்பட்ட புதிய கோட்டா

THREE WHEEL (Special)  10 15

THREE WHEEL (General)  5 8

MOTOR BIKE          4 7

BUS                40 60

CAR                 20 30

LAND VEHICLE          15 25

LORRY                  50 75

QUADRICE CYCLE 4 6

SPECIAL PURPOSE VEHICLE  20 30

VAN                 20 30

Exit mobile version