Site icon Tamil News

அடுத்த ஆண்டுக்குள் உணவு பணவீக்கத்தை ஒன்றறை இலட்சத்திற்கு நிலைப்படுத்த திட்டம்!

அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்குள் உணவு பணவீக்கத்தை ஒன்றறை இலக்கத்துக்கு நிலைப்படுத்துவோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்திட்ட நடவடிக்கைகளை சர்வதேச நிதி நிறுவனங்கள் வரவேற்றுள்ளன.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாம் காலத்திற்குள் பொருளாதார வளர்ச்சி முன்னெற்றமடையும்.

சகலருக்கும் நிவாரணம் வழங்கும் செயற்திட்டத்துக்கு 38 இலட்ச குடும்பங்களில் இருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்த விண்ணப்பங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மையானதா என்பது பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக பரிசீலனை செய்யப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version