Site icon Tamil News

அடுக்குமாடி குடியிருப்பில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்: பொலிஸாரின் அதிரடி!

ஸ்கார்பரோ மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் ஆண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஷெப்பர்ட் அவென்யூ கிழக்கு மற்றும் கிங்ஸ்டன் சாலை அருகே அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ரொறன்ரோ பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் காயங்களுடன் ஆபத்தான நிலையில் பெண் ஒருவரை மீட்டுள்ளதாகவும், ஆனால் முதலுதவி அளிக்கும் போதே அவர் மரணமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைதாகியுள்ளதாகவும், ஆனால் பெயர் உள்ளிட்ட தகவல்களை அதிகாரிகள் தரப்பு வெளியிடவில்லை எனவும் தெரியவந்துள்ளது.மேலும், இந்த விவகாரத்தில் கொலை வழக்கை விசாரிக்கும் பிரிவினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என பொலிஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version