ஆசியா

ஜீரோ கோவிட் திட்டம் ;சீனாவில் தொடரும் வேலையில்லா திண்டாட்டம்

சீனாவில் வேலைவாய்ப்பு குறைவாக இருப்பதால், அந்நாட்டு இளைஞர்கள் வேலை வேண்டி வழிபாட்டு தலங்களுக்கு செல்வது அதிகரித்துள்ளது.

சீனாவில் கொரோனா ஊடரங்கிற்கு பின்பு பொருளாதார நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் அந்நாட்டு அரசால் கொண்டு வரப்பட்ட ஜீரோ கோவிட் திட்டத்தின் மூலம் தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதனை தொடர்ந்து அந்நாட்டில் வேலை வாய்ப்புகள் உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஜீரோ கோவிட் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, கடந்த ஓராண்டில் மட்டும் 11.50 மில்லியன் பட்டதாரிகள், வேலையில்லாமல் தவித்து வருகின்றனர் என தெரியவந்துள்ளது.இந்நிலையில் சீனாவின் வழிப்பாட்டு தலங்களில் கடந்த ஆண்டு இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கின் படி 2021ஆம் ஆண்டை விட அதிகமாக 310% பேர் வருகை புரிந்துள்ளனர். இதில் 1990ஆம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்கள் அதிகம் என கணக்கெடுப்பு கூறுகிறது.

வேலை வாய்ப்பின்மையால் இளைஞர்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாவதை கட்டுப்படுத்தவும், வேலை கிடைக்கவும் வேண்டி வழிப்பாட்டு தலங்களுக்கு செல்கின்றனர்.சீனாவில் பொதுவாக பட்டதாரிகளை விட முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். மேலும் அவர்கள் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. இதனால் அந்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content