Site icon Tamil News

கொடூரமாக தாக்கப்பட்ட இளம பெண்!! சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை

பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது தொடர்பாக கைது செய்யப்பட்ட தம்பதியினர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

குறித்த நபர்கள் தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் வெலிசர நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தாக்குதலின் போது, ​​தம்பதியினர் இளம் பெண்ணை கைகளாலும் கால்களாலும் தாக்குவதுடன் நாற்காலிகள் மற்றும் பிற உபகரணங்களால் தாக்குவதை அவதானிக்க முடிந்தது.

சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான 19 வயதுடைய யுவதி மட்டக்குளிய பிரதேசத்தை சேர்ந்தவர்.

சந்தேகநபர்கள் தாக்குதலுக்கு உள்ளானவரின் உறவினர் என்பதும், அவரது வீட்டில் பல ஆண்டுகளாக தங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த பெண் தற்போது கந்தானை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாக்குதலுக்கு உள்ளான பெண் தனது காதலனுக்கு அலுவலக தொலைபேசியில் அழைப்பு விடுத்தமையால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version