Site icon Tamil News

தனியார் பேருந்து மோதியதில் பெண் ஒருவர் பலி!

கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதிக்கு அருகில் தனியார் பேருந்து மோதியதில் பெண் ஒருவர் நேற்று (19) உயிரிழந்துள்ளார்.

கோட்டையிலிருந்து பேட்டை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, சாலையோரம் நடந்து சென்ற பாதசாரிகள் மீது மோதியதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் அடையாளம் இதுவரை தெரியவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதியை கைது செய்ய கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Exit mobile version