இலங்கை செய்தி

சர்வதேச புகழ்பெற்ற அஜான் பிரம்மவன்சோ தேரருக்கு இலங்கையில் நேர்ந்த அவலம்

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற வணக்கத்திற்குரிய அஜான் பிரம்மவன்சோ தேரருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேர்ந்த சம்பவம் தொடர்பில் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

உலகம் போற்றும் பிரித்தானிய தேசிய துறவியான வணக்கத்திற்குரிய அஜான் பிரம்மவன்சோ தேரர் தாய்லாந்தின் பாங்கொக் செல்வதற்காக கடந்த 31 ஆம் திகதி காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இவ்வாறு வந்த பின்னர் ஜனாதிபதி விஐபி வசதிகளை வழங்கியதன் காரணமாக விமான நிலைய விஐபி முனையத்தில் உள்ள சாவடிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால், அவர் உரிய நேரத்தில் உரிய விமானத்துக்கு அழைத்துச் செல்லப்படவில்லை. சுமார் 12 மணி நேரம் கழித்து, அவர் மலேசியாவுக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்போது சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சிங்கப்பூர் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரம்மவன்சோ தேரர் 12 மணித்தியாலங்கள் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றிய செயற்பாட்டு அதிகாரி தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

See also  இலங்கை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் - இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு

கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியின் செயலாளர் விடுத்துள்ள அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றின் போது வணக்கத்துக்குரிய அஜான் பிரம்மவன்சோ தேரர் இலங்கையில் தாம் எதிர்கொள்ள நேர்ந்த சம்பவம் குறித்த உண்மைகளை விளக்கினார்.

(Visited 19 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content