Site icon Tamil News

கொழும்பின் பலப் பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தல நீர் விநியோகத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆற்றலைச் சேமிக்கும் செயற்றிட்டத்தினால் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய முன்னேற்றப் பணியின் காரணமாகவே இந்த நீர்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நாளை (04.11) இரவு 7 மணி முதல் மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை 05) காலை 5.00 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.

நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டமையினால் நீர் பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு சபை வருத்தம் தெரிவிப்பதுடன், தேவைக்கேற்ப தண்ணீரை சேமித்து வைக்குமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களுக்கு அறிவித்துள்ளது.

Exit mobile version