ஐரோப்பா

பிரான்ஸை உலுக்கிய வன்முறை – பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு

பிரான்ஸில் கலவரம் அடக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இதனால் வன்முறையாளர்கள் தங்களது எல்லையை மீறியுள்ளதாக கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் Nîmes (Gard) நகரில் இடம்பெற்றுள்ளது.

வன்முறையினை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரை நோக்கி துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.

9 மில்லி மீற்றர் அளவுடைய துப்பாக்கி சன்னம் அதிகாரி மீது பாய்ந்த நிலையில், அவரது குண்டு துளைக்காத ஆடையில் பட்டு தெறித்துள்ளது. அதிகாரி காப்பாற்றப்பட்ட போதும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதேவேளை, வன்முறையாளர்கள் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டக்காரர்கள் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்வது எல்லை மீறிய செயல் என பொலிஸ் தொழிற்சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்