Site icon Tamil News

இஸ்ரேலை ஊக்குவிக்கும் அமெரிக்கா – ஈரான் ஜனாதிபதி குற்றச்சாட்டு

இஸ்ரேல் – ஹமாஸ் போர் உக்கிரமடைந்து வருகின்றது. இந்த நிலையில், காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனர்களைக் கொல்ல இஸ்ரேலை அமெரிக்கா ஊக்குவிக்கிறது என ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி குற்றம்சாட்டியுள்ளார்.

காசாவில் ஒரே மாதத்தில் 3-வது முறையாக தொலைத்தொடர்பு முடக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் – இஸ்ரேல் மோதலில் இதுவரை 9,700-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்களில் 4000-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள். இஸ்ரேலில் 1,400 பேர் பலியாகியுள்ளனர். 242 பேர் ஹமாஸ் படையினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரைப்பகுதிக்கு திடீர் பயணம் செய்தார்.

பின்னர் அவர் பாலஸ்தீன ஜனாதிபதி மஹமூத் அப்பாஸை சந்தித்தார். காசாவாசிகள் கட்டாயமாக வெளியேற்றப்படக் கூடாது என்று அமெரிக்க அமைச்சர் பிளிங்கன் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version