பாகிஸ்தானின் சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் (CCHF) வைரஸால் இரண்டு பேர் இறந்துள்ளனர்..
பொதுவாக காங்கோ காய்ச்சல் என்று அழைக்கப்படும் இந்த நோயினால் ஏற்பட்ட முதல் மரணம் தெற்கு சிந்து மாகாணத்தின் தலைநகருமான கராச்சியில் பதிவாகியுள்ளது.
மாகாண சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, 28 வயதானவர் ஏப்ரல் 30 அன்று காய்ச்சல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை சரியில்லாததால், இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் ஒரு நகர மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது.
அவர் CCHF வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்த பிறகு தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டார் பின்பு மறுநாள் இறந்து விட்டார்.
நேற்று தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவில் 20 வயது பெண் காங்கோ காய்ச்சலால் இறந்தார்.
அந்த பெண் கடந்த வாரம் குவெட்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பலுசிஸ்தானில் உள்ள அரசாங்க சுகாதார அதிகாரி டாக்டர் லால் ஜன் குறிப்பிட்டார்.
மேலும் பாகிஸ்தானில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து CCHF வைரஸின் மொத்தம் 16 நேர்மறை வழக்குகள் உள்ளன, அவற்றில் 11 இந்த மாதம் கண்டறியப்பட்டது.