Site icon Tamil News

வட இந்தியாவில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து : 40 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக தகவல்!

வட இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் குழு ஒன்று சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு காரணமாக, சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நேற்று இடிந்து விழுந்ததில், சுமார் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிவாரணப் பணியாளர்கள் தங்களது மீட்புப் பணிகளை ஏற்கனவே தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில்க்யாரா சுரங்கப்பாதை என பெயரிடப்பட்ட சுரங்கப்பாதையின் தொடக்கப் புள்ளியிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், நிவாரணப் பணியாளர்கள் தொழிலாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version