Site icon Tamil News

வீட்டுப் படுக்கை அறையில் இறந்து கிடந்த ட்ரம்பின் சகோதரி!

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சகோதரி மேரியன் ட்ரம் பேரி(86) காலமானார்.

நியூயார்கின் புறநகர் பகுதியான மான்ஹாட்டனில் வசித்து வந்த மேரியன் திங்கட் கிழமை காலை தனது வீட்டில், தனது படுக்கை அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த நியூயார்க் நகர பொலிஸார், அவரது வீட்டிற்கு சென்று பார்த்து அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

அவரது இறப்புக்கான காரணம் என்ன என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. முதற்கட்ட விசாரணையில் மேரியன் கார்டியக் அரெஸ்ட் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. வேறு, எந்த அசம்பாவிதமும் நடந்ததற்கான தடயங்கள் ஏதுமில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மூத்த சகோதரியான இவர் கடந்த 1983ம் ஆண்டு நியு ஜெர்சியில் பெடரல் ஜட்ஜாக இருந்து, கடந்த 2019ம் ஆண்டு ஓய்வு பெற்றவர். சகோதரியின் இறப்பு குறித்து டொனால்ட் ட்ரம்ப் இதுவரை எந்த அறிக்கையும், இரங்கலும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

கடந்த 2020ம் ஆண்டு இவர் தனது சகோதரரும், அமெரிக்க அதிபருமாக இருந்த டொனால்ட் ட்ரம்ப் குறித்து பரபரப்பு கருத்தை தெரிவித்திருந்தார். அதாவது, தனது குடும்பம் எப்படி உலகின் ஆபத்தான மனிதனை உருவாக்கியுள்ளது என தெரிவித்திருந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல், தன்னைக் கடைசி வரை மறக்காமல் இருக்க வேண்டும் என்றும் அவர் ட்ரம்புக்கு கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version