பிரித்தானியாவில் இன்று (10.08) அதிகாலை வீடொன்றில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் தூங்கிக்கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Kent Fire and Rescue Service (KFRS) இன் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.
தீயணைப்பு நடவடிக்கையில் கென்ட் காவல்துறை மற்றும் தென்கிழக்கு கடற்கரை ஆம்புலன்ஸ் சேவை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.